search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ஷ் இ முகமது அமைப்பு"

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது கூறிய குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    ராகுல் காந்தி பேசுகையில் ‘கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர்.  புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையிலிருந்து யார் விடுவித்தது. எந்த கட்சி விடுவித்தது? என சற்றே சிந்தித்து பாருங்கள். முந்தைய பாஜக அரசும், தற்போதைய தேசிய  பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த் தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, கந்தகாரில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு அஜித் தோவல் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார்’ என குற்றம் சாட்டினார்.



    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar



    பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் இருந்த இடத்தினை 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா அறிந்திருந்த தகவல் வெளியாகியுள்ளது. #JeMCampknownbyUS
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பகுதிக்குள் 15 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாம் இருந்தது அமெரிக்காவிற்கு தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியே கசிந்த அமெரிக்க ராணுவ ஆவணங்களில் இதுபற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.



    கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் ஜாபரி மில்லர் கையெழுத்திட்ட அந்த ஆவணத்தில்,  பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    குறிப்பாக, ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியின் வாக்குமூலம் இடம் பெற்றிருந்தது. அதன்மூலம்  பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா துல்லியமாக அறிந்தது.

    பாகிஸ்தானில் உள்ள குஜார் பகுதியைச்  சேர்ந்த ஹஃபீஸ் ரஹ்மான்(20), பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றதாகவும், அங்கு தனக்கு ஆரம்ப மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக அந்த ஆவணத்தில் உள்ளது.

    இந்த ஆவணத்தின் மூலம், ரஹ்மான் அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளுக்கு எதிராக செயல்பட, ஜெய்ஷ் இ முகமது அமைப்பிடம் இருந்து பயிற்சி பெற்றுள்ளது தெரியவந்தது. ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பயங்கரவாதிகளை உருவாக்குவதோடு, அல் கொய்தாவுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ரஹ்மான் முல்லா பயங்கரவாதிகளின் தூண்டுதலால், தலிபான் அமைப்பிற்கு உதவ சென்றுள்ளான். பாகிஸ்தானின் சஹிர் பகுதிக்கு சென்று ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளான். பயிற்சி முடிந்த பின்னர் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புடன் இணைந்து ஆப்கனிஸ்தான் சென்றுள்ளான். இதன்பின்னர் கியூபாவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டான்.

    ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தான் நாட்டின் உதவியோடு இயங்கக்கூடிய மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்றும், அந்த அமைப்பு அமெரிக்காவை தாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் ஜாபரி மில்லர் தனது ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார் . #JeMCampknownbyUS

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையை முற்றிலும் அழித்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #KJSDillon
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    இதனையடுத்து நேற்று அப்பகுதியில் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.  இதில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி கம்ரான் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பினரை காஷ்மீரில் இருந்து ஒழித்துவிட்டதாக ராணுவ அதிகாரி கான்வல் ஜீத் சிங் தில்லோன் இன்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கான்வல் ஜீத் சிங் தில்லோன் மேலும் கூறியதாவது:-

    ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த இந்த அமைப்பினைச் சேர்ந்த அனைவரையும் கண்டறிந்து, ஒழித்து விட்டோம். இந்த நடவடிக்கை புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இருந்து 100 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

    பாகிஸ்தான் ராணுவத்தின் குழந்தையாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுகிறது. பயங்கரவாதிகளை ஒழிப்பதையே எங்கள் இலக்காக கொண்டுள்ளோம். காஷ்மீரின் எல்லைக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் நிச்சயம் திரும்பிச் செல்லமாட்டார்கள். காஷ்மீரில் இருக்கும் தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் மகன், ஆயுதம் ஏந்தியிருந்தால், அதை உடனடியாக துறக்கச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் கடைசி பயங்கரவாதியை கொல்லும் வரை ஓயமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #KJSDillon

    ×